வைகுந்தப் பெருமாள் கோயில், பல்லவ மன்னன் நந்திவர்மனால், 7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். விஷ்ணுவுக்காக எழுப்பப்பட்டுள்ள இக்கோயிலின் மூலஸ்தானம் மூன்று தனிப்பட்ட அடுக்குகளைக் கொண்டது. மூலஸ்தானத்தில், தேர்ந்த சிற்ப வேலைப்பாடுகளோடு, உட்கார்ந்த, நின்ற மற்றும் படுத்த கோலங்களில், விஷ்ணுவின் மிகப் பெரும் திருவுருவச் சிலைகளைக் காணலாம். வருடந்தோறும் விஷ்ணுவின் அருளை வேண்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர். இக்கோயிலின் முக்கியமான கவர்ந்திழுக்கும் அம்சமான, “ஆயிரங்கால் மண்டபத்தை” காண ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், இங்கு வருகின்றனர். இத்தூண்கள் ஒவ்வொன்றிலும் வேவ்வேறு சிலைகள் செதுக்கப்பட்டு, ஒவ்வொரு தூணும் தனிச்சிறப்புடன் திகழ்கின்றது. கோயிலின் நடைபாதைகள் யாவற்றையும், சிங்கத்தின் சிலை செதுக்கப்பட்டுள்ள தூண்கள் தாங்கிப் பிடிக்கின்றன. இக்கோயிலின் கட்டுமானம், இந்து மதச் சிறப்பு மட்டுமின்றி, வரலாற்றுச் சிறப்பு மிக்கதுவும் ஆகும். இக்கோயிலின் சுவர்களில், சாளுக்கியருக்கும், பல்லவர்களுக்கும் நடைபெற்ற போரினைப் பற்றிய குறிப்புகள் செதுக்கப்பட்டுள்ளன.
சுவாமி : வைகுந்த பெருமாள்.
அம்பாள் : வைகுந்தவல்லி தாயார்.
தீர்த்தம் : ஐரம்மத தீர்த்தம்.
விமானம் : முகுந்த விமானம்.
தலச்சிறப்பு : இத்திருக்கோவில் மாடகோயில் வகையைச் சார்ந்தது. மூன்று நிலைகளைக் (தளங்கள்) கொண்டுள்ளது. முதல் தளத்தில், மூலவர் வைகுந்தப் பெருமாள் அமர்ந்த திருக்கோலத்தில், மேற்குப் பார்த்த வண்ணம் எழுந்தருளி அருள்புரிந்து கொண்டுள்ளார். இரண்டாம் தளத்தில், அரங்கநாதப் பெருமாள், வடக்கே தலைவைத்து அனந்த சயன திருக்கோவில் எழுந்தருளி அருள்புரிந்து கொண்டுள்ளார். மூன்றாம் தளத்தில், பரமபதநாதர் நின்ற திருக்கோவில் எழுந்தருளிய அருள்புரிந்து கொண்டுள்ளார். இவ்வாறு பெருமாள் இருந்த, கிடந்த, நின்ற திருக்கோலங்களைக் கொண்டு மும்மாடக் கோயிலில் எழுந்தருளி சேவார்த்திகளுக்கு அருள்புரிந்து கொண்டுள்ளார்.
தல வரலாறு : இக்கோவில் மகாவிஷ்ணுவ இருந்த, கிடந்த, நின்ற கோலங்களைக் கொண்ட மும்மாடக் கோயில். இக்கோவில் பரமேஸ்வரவர்மன் என்ற 2ஆம் நந்திவர்ம பல்லவ மன்னனால் எழுப்பப்பட்டு பரமேஸ்வர விண்ணகரம் எனப் பெயரிடப்பட்டடுள்ளது. ராஜசிம்மன் காலத்து பாணியில் கட்டப்பட்ட கற்றளி எனக் குறிப்பிப்பட்டுகிறது.
ஒரு சமயம் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் இந்தத் தலத்தின் மேன்மையை காண வருகை புரிந்தனர். அதையறிந்த மகரிஷிகளும் தேவர்களும் கடவுளரைத் தரிசிக்க அங்கே வருகை தந்தனர். இறைவனை தரிசிக்க எல்லாரும் வந்திருக்க, ஆழ்ந்த தவத்திலிருந்த பரத்வாஜ முனிவர் மட்டும் வரவில்லை. இதில் கோபமுற்ற சிவனார் ரம்பா, ஊர்வசி ஆகியோரை அனுப்பி, முனிவரின் தவத்தைக் கலைத்தார்.
அப்போது, முனிவருக்கு ஏற்பட்ட சபலத்தால் பிறந்த குழந்தைக்கு பரமேஸ்வரன் எனும் திருநாமம் சூட்டினார். திருமாலின் பேரருளால் பரமேஸ்வரன் மன்னனானான். அவனுக்கு வைகுந்தப் பதவியையும் அளித்து அருளியதால் பெருமாள் சூடிகொண்டிருக்கும் தலம், பரமேஸ்வர விண்ணகரம் என்றும் பெருமாள் ஸ்ரீ வைகுண்ட பெருமாள் எனவும் அழைக்கப்பட்டார்.
காஞ்சி, காமாட்சி அம்மன் கோயிலுக்குக் கிழக்கே சுமார் மூன்று ஏக்கர் நிலப்பரப்பளவில் மேற்கு நோக்கிய மொட்டைக் கோபுரமும் இரண்டு பிரகாரங்களையும் கொண்டது இந்த கோயில். மூலவர் ஸ்ரீ பரமபத நாதப் பெருமாள். தாயார் வைகுந்தவல்லி. விமானம் முகுந்த விமானம். இது மூன்று தளம் கொண்டு அஷ்டாங்க விமானமாக உள்ளது. மேல் தளத்தில் எம்பெருமான் நின்ற திருக்கோலத்திலும் இரண்டாம் தளத்தில் ஸ்ரீ தேவி பூதேவி சமேதராக சயனக்கோலத்தில் ரங்கநாதராகவும் கீழ்தளத்தில் வீற்றிருந்த கோலத்தில் ஸ்ரீ வைகுண்டப் பெருமாளாகவும் அருளாட்சி புரிகின்றார்.
இரண்டாவது தளத்தில் அருளும் பெருமாள், வடக்கே தலையும், தெற்கே பாதங்களை வைத்தும் சயனித்திருப்பது மிகவும் விசேஷம் என்கிறார்கள். திருக்கோயிலின் மூலவர் மற்றும் பிரகாரத் தூண்கள் யாவும் ஒரே கல்லில் வடிக்கப்பட்டுள்ளன.
திருக்கோயிலிலுள்ள பிரமாண்ட மான மண்டபங்களும் அவற்றின் தூண் சிற்பங்களும் கொள்ளை அழகுடன் காட்சியளிப்பது சிறப்பு. சுற்றுச் சுவர்களில் சிற்பங்களாகத் திகழும் 18 பல்லவ மாமன்னர்கள் பட்டாபிஷேகக் காட்சிகள் மிகவும் அற்புதம். இன்றளவும் அவை வரலாற்றுச் சான்றுகளாகத் திகழ்கின்றன. இவ்வாலய மூலவரின் திருநாமம் ஸ்ரீ வைகுண்டப் பெருமாள் என்றாலும் இங்கு சொர்க்கவாசல் உத்ஸவம் கிடையாது. இப்பெருமாளுக்கு ” பரமபதநாதன் என்ற திருநாமமும் உண்டு.
வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீ வைகுந்தவல்லித் தாயாருக்கு அர்ச்சனை செய்து பிரார்த்தித்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. மார்கழியில் புளியோதரை, சர்க்கரைப்பொங்கல் வைத்து நைவேத்யம் செய்து பெருமாளை வழிபட நினைத்த காரியங்கள் கைகூடும் என்கிறார்கள் பக்தர்கள்.
பரமேஸ்வர விண்ணகரம்
பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மனால் கட்டப்பட்டது இவ்வாலயம். இங்கு, நின்ற நம்பி, கிடந்த நம்பி, அமர்ந்த நம்பி என்ற திருக்கோலங்களில் பெருமாளை தரிசிக்கலாம். சிற்பக்கலைக்கு பெயர் பெற்ற இக்கோயில் ஒருவிதமான மணல் கற்களால் கட்டப்பட்டது.