மன அமைதிக்காக பிரார்த்தனை செய்கிறோம். பிரார்த்தனை செய்ய முடியாதவர்கள் பெருமாள் கோயிலுக்கு இதெல்லாம் சென்று திருமாலுக்கு கண்டு தங்களது பாவத்தைப் போக்கிக் கொள்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, வட நாட்டிலும் திருமால் நிறைய பேருக்கு தரிசனம் கொடுத்த வரலாறும் உண்டு. அதேபோல் கள்ளிக்கோட்டை அருகே திருமால் பக்தர்களுக்காக தரிசனம் கொடுத்த வரலாறும் உண்டு. கேரளாவில் உள்ள கோயில்களுள் பிரசித்தி பெற்ற திருமால் ஸ்தலம் தான் ‘ திருநாவாய்’.
அமைதியான சூழ்நிலையில்அமைந்துள்ள இந்த திருநாவாய் சென்னை – கள்ளிக்கோட்டைரயில் மார்க்கத்தில் உள்ளது. ஷோரனூரில் இருந்து பஸ் மூலம் குட்டிபுரம் வந்து, அங்கிருந்து வேறொரு பஸ் மூலம் திருநாவாய் கோயிலை அடையலாம். மூலவர் நாவாய் முகுந்தன் நாராயணன் என்று வேறு பெயரும் உண்டு. தாயார் மலர்மங்கை நாச்சியார். சிறுதேவி என்று வேறொரு பெயரும் உண்டு. தீர்த்தம் செங்கமல ஸரஸ், விமானம் வேத விமானம்.
‘பாரதப்புழை’ என்னும் ஆறு கோயிலையொட்டி ஓடுகிறது. எதிர் கரையில் சிவனுக்கும், பிரம்மாவுக்கும் கோயில்கள் தனித்தனியாக இருக்கின்றன. இங்கு காசிக்கு சமமாக எண்ணி, முதியோர்களுக்கு சிரார்த்தங்கள் செய்கின்றனர்.
இந்த புனிதமான இடத்தில் ஒன்பது யோகிகள் யாகம் செய்து பெருமாளின் தரிசனத்தை கண்டதால் முதலில் இந்த ஸ்தலத்திற்கு திருநவயோகி என்று பெயர்! நாளடைவில் இது மருவி ‘ திருநாவாய்’ என்று மாறி விட்டதாக சொல்லப்படுகிறது.
இன்னொரு சமயம் மகாலட்சுமி, கஜேந்திரனும் தாமரைப் பூக்களைப் பறித்து தினமும் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்தனர். திடீரென்று தாமரை பூ கிடைக்கவில்லை என்று கஜேந்திரனும், லட்சுமியும் திருமாலை நோக்கி பிரார்த்தனை செய்தனர். உடனே திருமால் பிரதட்சியம் ஆகி இதுவரை செய்த பூஜைகள் போதும். இனியும் தாமரைப் பூவால் அர்ச்சனை வேண்டாம்” என்று சொல்லி கஜேந்திரனுக்கு வாழ்த்துக் கூறி, மகாலட்சுமியை தன்னுடன் அழைத்துச் சென்றதாக புராண வரலாறு சொல்கிறது. திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள்.
மூலவர் – நாவாய் முகுந்தன் (நாராயணன்)
தாயார் – மலர்மங்கை நாச்சியார் (சிறுதேவி)
தீர்த்தம் – கமல தடாகம்
பழமை – 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் – திருநாவாய்
மாவட்டம் – மலப்புரம்
மாநிலம் – கேரளா
முன்னொரு காலத்தில் மகாலட்சுமியும், கஜேந்திரனும் தாமரைப்பூக்களை பறித்து பெருமாளை பூஜித்து வந்தனர். இதில் ஒருமுறை கஜேந்திரனுக்கு அர்ச்சனை செய்வதற்கு பூக்கள் கிடைக்காமல் போனது. இதனால் வருத்தமடைந்த கஜேந்திரன் பெருமாளிடம் தனது நிலையைக் கூறி வருத்தப்பட்டான். உடனே பெருமாள் இலட்சுமி தேவியை அழைத்து, “இனிமேல் பூப்பறிக்க வேண்டாம். கஜேந்திரனுக்காக விட்டுக்கொடு” என்று கூறினார். இலட்சுமியும் அதன்படி செய்தாள். இதனால் மகிழ்ந்த கஜேந்திரன் தினமும் ஏராளமான பூக்களைப்பறித்து, பெருமாளை அர்ச்சித்து வந்தான். பூஜையின் போது பெருமாள், இலட்சுமி தேவியை தன்னுடன் ஏக சிம்மாசனத்தில் அமரச்செய்து கஜேந்திரனின் பூஜையை ஏற்று தரிசனம் தந்ததாக புராண வரலாறு கூறுகிறது. கேரளாவில் இந்த தலத்தில் மட்டும் தான் இலட்சுமிக்கு தனி சன்னதி உண்டு என்கிறார்கள்.
ஒரு முறை 9 யோகிகள் சேர்ந்து பெருமாளை நினைத்து தவம் செய்துள்ளனர். எனவே இத்தலம் “நவயோகிகள் தலம்” என அழைக்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் “நாவாய் தலம்” ஆனது. இதை தற்போது “திருநாவாய்” என அழைக்கிறார்கள்.
இத்தலப்பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இவருக்கு மேலே உள்ள விமானம் வேத விமானம் எனப்படுகிறது. இவரை இலட்சுமி, கஜேந்திரன், நவயோகிகள் தரிசனம் செய்துள்ளனர்.
கோயிலின் சுற்றுப்பகுதியில் கணபதி, லட்சுமி, ஐயப்பனுக்கு சன்னதிகள் உண்டு. கோயிலுக்கு எதிரே உள்ள ஆற்றின் அக்கரையில் பிரம்மனுக்கும், சிவனுக்கும் தனி கோயில் உள்ளது. எனவே இத்தலத்தை மும்மூர்த்தி தலம் என அழைக்கிறார்கள். மிகப்பழமையான இக்கோயிலின் உட்புற சுவர்களில் காலத்தினால் அழியாத பல ஓவியங்கள் இன்றும் உள்ளன.
பெருமாளின் 108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று. திருமங்கையாழ்வார் தமது பாசுரங்களில் இத்தலத்தை திருக்கோட்டியூருக்கும், திருநறையூருக்கும் ஒப்பிட்டு மங்களாசாசனம் செய்துள்ளார்.
நம்மாழ்வார், திருமங்கையாழ்வாரர் மங்களாசாஸனம்
மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் கண்ணாளன் உலகத்துயிர் தேவர்கட் கெல்லாம் விண்ணாளன் விரும்பியுரையும் திருநாவாய் கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே.
–நம்மாழ்வார்
காசியில் நடப்பதை போல இத்தலத்தில் ஏராளமானவர்கள் முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் கொடுக்கிறார்கள். கேரள மாநிலத்தில் பித்ரு தர்ப்பணம் கொடுப்பதில் இத்தலம் முதன்மை வகிக்கிறது.
பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்
பாலக்காட்டிலிருந்து (100 கி.மீ) பட்டாம்பி சென்று அங்கிருந்து குட்டிபுரம் என்ற ஊரில் இறங்கி ஆட்டோவில் திருநாவாய் செல்லலாம்.