தென்திருப்பேரையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு மகர நெடுங்குழைக்காதர் திருக்கோயில் ஆகும். இத்திருக்கோயில் நவதிருப்பதிகளில் ஏழாவது திருப்பதியாகவும் நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஐம்பத்துமூன்றாவது திவ்ய தேசமாகவும் விளங்குகிறது.
புராணச் சிறப்பு:
திருமாலின் தேவியரில் ஸ்ரீதேவி சிவந்த நிறம் கொண்டவர். பூதேவி கருமை நிறம் கொண்டவர். சிவந்த நிறம் கொண்ட தம்மைவிட பூதேவியிடம் அதிக அன்பு கொண்டவராக திருமால் இருப்பதைக் கண்ட திருமகள் துர்வாச முனிவரிடம் சென்று பூதேவியின் கரிய நிற மேனியை சிவந்த பொன்மேனியாக மாற்றுமாறு வேண்டிக்கொண்டார்.
துர்வாச முனிவர் திருமாலைக் காண செல்கிறார். திருமாலின் திருமடியில் சயனித்து இருந்த பூதேவி துர்வாசரின் வருகையை கவனிக்கவில்லை இதனால் கோபமுற்ற துர்வாசர் பூதேவி கரிய நிறம் நீங்கி சிவந்த நிறம் அடையுமாறு சபித்தார். பூதேவியும் குற்றத்தை பொருத்தருள வேண்டி சாபவிமோசனம் வேண்டினார்.
தாமிரபரணி நதிக்கரையில் உள்ள அரிபதம் என்ற இடத்திற்க்கு சென்று திருப்பேரை எனும் பெயர் தாங்கி திருமாலை வழிபட்டு வந்தால் மீண்டும் கரிய நிறம் அடையலாம் என்று துர்வாச முனிவர் கூறினார். பூதேவியும் தங்கத் திருப்பேரை எனும் நாமத்துடன் இவ்வூரில் தோன்றி தாமிரபரணி நதிக்கரையில் தவமியற்றி வந்தார்.
பங்குனி உத்திரத் திருநாளன்று நதியில் நீராடிய பூதேவியின் கரங்களில் மீன் வடிவக் குண்டலங்கள் கிடைத்தது. அவற்றை கொண்டு சென்று பெருமாளின் காதுகளில் அணிவித்தார். திருமால் மகிழ்ந்து பூதேவியின் கரிய நிறத்தை மீண்டும் அளித்து தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.
எம்பெருமான் காதுகளில் நெடிய குண்டலம் அணிந்திருப்பதால் நெடுங்குழைக்காதர் என அழைக்கப்பட்டார். இத்திருத்தலம் தென் திருப்பேரை என அழைக்கப்பட்டு வருகிறது.
இலக்கியச் சிறப்பு:
நம்மாழ்வார் இத்திருப்பதி மீது பதினோரு பாசுரங்கள் பாடியுள்ளார்.
தனிச் சிறப்பு:
இத்திருக்கோயில் நவதிருப்பதிகளில் ஏழாவது திருப்பதியாகவும் நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஐம்பத்துமூன்றாவது திவ்ய தேசமாகவும் விளங்குகிறது.
கருடன் சன்னதி பெருமாளுக்கு நேர் எதிரில் அமையாமல் சற்று விலகி அமைந்துள்ளது. வேதம் ஓதும் சப்தங்களையும், விழாக்கள் நடைபெறும் ஓசைகளையும், சிறு பிள்ளைகள் விளையாடும் ஒலிகளையும் பெருமாள் தினமும் கேட்க விரும்பியதால் கருடன் சற்று விலகி அமைந்துள்ளதாக தலபுராணம் கூறுகிறது. அமைவிடம்: திருநெல்வேலி – திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூரிலிருந்து நிறைய பேருந்து வசதிகள் உள்ளது. இறைவன் : மகர நெடுங்குழைநாதர், நிகரில் முகில்வண்ணன் இறைவியர்: திருப்பேரை நாச்சியார், குழைக்காது நாச்சியார் தீர்த்தம் : கூடுபுனல் தீர்த்தம்(ஸகந்த தீர்த்ட்தம்) சுக்ர புஷ்கரணி தல விருட்சம் : வில்வ மரம் ஆகமம் : பாஞ்சராத்திர ஆகமம் விமானம் : பத்ர விமானம்
தல வரலாறு : ஸ்ரீமத் நாராயணன் திருமாலை விடுத்து பூமிதேவியிடம் அதிக ஈடுபாடு கொண்டதாக நம்பிய திருமகள் துர்வாச முனிவரிடம் பூமா தேவியை போல, தான் அழகு இல்லாத காரணத்தால் ஸ்ரீமந் நாராயணனே தன்னை வெறுக்கின்றார். அதனால் அவளை போன்றே தனக்கும் அழகும் நிறமும் வேண்டும் எனக் கேட்டார். துர்வாசரும் பூமிதேவியை காண வந்த பொழுது திருமாலின் மடியில் அமர்ந்து துர்வாசரை மதியாமல் இருக்க, கோபத்தில் துர்வாசகர் பூமாதேவியை நீ இலக்குமியின் உருவத்தை பெறுவாய் என சாபமிட்டார். எனவே சாப விமோசனம் பெற பூமாதேவி இத்தலம் வந்து ஓம் நமோ நாராயணன் என்ற மந்திரத்தை ஜெபம் செய்து வர பங்குனி பவுர்ணமி தினத்தில் ஜெபம் செய்து ஆற்றில் நீரை அள்ளி எடுக்கும் பொழுது இரண்டு மகர குண்டலங்கள் (மீன் வடிவான காதில் அணியும் ஓர் அணிகலன்) கிடைக்க அப்பொழுது திருமால் பிரத்யட்சமாக குண்டலங்களை திருமாலுக்கு அளித்து மகிழ்ந்தார்.
தேவர்கள் பூ மாரி சொரிய பூமா தேவியின் மேனி அழகானது. லக்குமியின் உடலுடன் பூமா தேவி தவமிருந்தால் ஸ்ரீபோரை (லக்குமியின் உடலைப் பெற்றவர்) என்று ஆனது. இன்று பெருமாள் மகர குண்டலங்களுடன் காட்சியளிக்கிறார். இதனால் பொருளின் திருநாமம் மகர நெடுங்குழைகாதன் (மீன் வடிவிலான நீண்ட காதணிகளை அணிந்தவன்) வருணன், அசுரர்களிடம் போரிட்டு தன் பாசம் என்னும் ஆயுதத்தை இழந்து இத்தலம் வந்து தவம் செய்து திரும்பப் பெற்றதால் இத்தலத்தில் மழை வேண்டி (வருண பகவானை) பிராத்திக்கும் பிராத்தனைகள் இன்று வரை பொய்ப்பதில்லை. சுக்கிரனும் இங்கு வந்து பெருமாள் அருள் பெற்றார்.
விதர்ப்ப நாட்டு மன்னன் இங்கு வந்து வழிபட்டதால் நாட்டின் 12 வருட பஞ்சம் நீங்கி நாடு செழித்ததாக வரலாறு கூறுகிறது. பிரம்மனும் ஈசானய ருத்தரருக்கும் முன்பாக குழைக்காத நாச்சியார், திருப்பேரை நாச்சியார் சகிதம் வீற்றிருந்த பரமபத திருக்கோலத்தில் பெருமாள் சேவை சாதிக்கின்றார். வேதம் ஓதி வரும் வேத வித்தைகளை காணவும், ஓடி விளையாடும் குழந்தைகளின் மகிழ்ச்சியை காணவும் இங்கு பெருமாள் கருடனை ஒதுங்கி இருக்க கூறியதால் கருடன் சன்னதி பெருமாளுக்கு இடப்பக்கமாக விலகி அமைந்துள்ளது.
வேத ஒலியும் விழா ஒலியும் பிள்ளைக் குழாவிளையாட்டு ஒலியும் அறாத்திருப்பேரையில் சேர்வன் நானே. என்ற நம்மாழ்வார் பாசுரமும் இதையே காட்டுவதாக கூறப்படுகின்றது. நம்மாழ்வார் காலத்திற்கும் முன்னே அமையப் பெற்றது. இக்கோவில் பின் பத்தாம் நூற்றாண்டின் மத்தியில் கொடி மரமும், மண்டபமும், பின் வெளி மண்டபம், தேரும் செய்யப்பட்டுள்ளதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. சுந்தரபாண்டியனுக்கு குழந்தை பேறு பெற வேண்டி அவனால் சோழ நாட்டில் இருந்து இவ்வூருக்கு அழைத்து வரப்பட்டு தினசரி பெருமாளை பூஜை செய்வதற்காக குடியமர்த்தி பொன்னும் பொருளும் கொடுக்கப்பட்ட ஜெய்முனி சாமவேத தலவகார நூற்றெண்மர் வழி வந்த அவ்வூர் அந்தணர்கள் பெருமாளை தங்களுள் ஒருவராகவே கருதி கைங்கரியங்களை செய்து வருகின்றனர்.
விதர்பா இராஜ்யம் ஒரு சாபத்தால் பல ஆண்டுகளாக கடுமையான வறட்சி மற்றும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டது. விதர்ப மன்னர் இந்த புனித நிலத்திற்கு வந்து விஷ்ணுவை வழிபட்டு சாபத்திலிருந்து விடுபட்டார். மீண்டும் ராஜ்யம் வளமான இயற்கை வளங்களால் செழித்தது.
மற்றொரு புனைகதை என்னவென்றால், காவேரி ஆற்றங்கரையில் குடியேறிய 108 வேத பிராமணர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் சுந்தரா பாண்டியன் மன்னர் அழைத்து வந்தார். வேத பிராமணர்களுக்கு பிச்சை வழங்கும்போது, குழுவில் ஒருவர் காணாமல் போனார். பிரச்சினையைத் தீர்க்கும்படி மன்னர் இறைவனிடம் பிரார்த்தனை செய்தார், இறைவன் தானே மன்னர் முன் ஒரு வேத பிராமணராக பிச்சை எடுக்க தோன்றினார்.
வார்த்தைகளினால் வர்ணிக்க முடியாத அப்பேற்பட்ட காட்சி அது. ஸ்ரீ ரங்கநாதனின் அழகை முகில்வண்ணன் (அழகுடையவன்) என்று பாடிய நம்மாழ்வார் பின்வரும் பாடலில் நிகரில் முகில் வண்ணன் (ஈடு இணையற்ற அழகுடையவன்) என்று ஸ்ரீமகர நெடுங் குழைக்காதனை பாடியுள்ளார். “கூடுபுனல் துறையும் (தாமிரபரணி கரை) குழைக்காதனை திருமாலையும் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என்பது இவ்வூரில் வழக்கில் உள்ள ஒரு கூற்று.
சுந்தர பாண்டியனுக்காக 108 நபர் இருந்தனர். பெருமாளே காணாமல் போன நபர் வடிவில் அரசன் முன் தோன்றினார் எனவும் அதனால் பெருமாள் எங்களில் ஒருவர் எனவும் இவ்வூர் மக்கள் கூறுகின்றனர். இங்கு பங்குனி ப்ரமோஸ்தலத்தின் 5ம் திருநாள் இரவு பெருமாள் கருட சேவையில் பிரதான வாயிலில் இருந்து வெளி மண்டபத்திற்கு ஏழுகின்ற சமயத்தில் பெருமாளை சேவிக்கும் நாத்திகனும் ஆத்திகனும் ஆவான்.
துர்வாசமுனிவரின் சாப விமோசனம் பெறுவதற்காக பூமாதேவி இத்தலம் வந்து ஓம் நமோ நராயணாய என்ற மந்திரத்தை ஜெபம் செய்தார். பங்குனி பவுர்ணமி தினத்தில் ஜெபம் செய்து ஆற்றில் நீரை அள்ளி எடுக்கும்போது இரண்டு மகர குண்டலங்கள் கிடைக்க திருமாலுக்கு அணிவித்து மகிழ்ந்தார். அப்போது தேவர்கள் பூமாரி செரிய பூமா தேவியின் மேனி அழகானது. லக்குமியின் உடலுடன் பூமாதேவி தவமிருந்ததால் இவ்வூர் ஸ்ரீபேரை என்றழைக்கப்பட்டது. இத்தலத்தில் மழை வேண்டி பிரார்த்தனை செய்தால் இன்று வரை பெய்ப்பதில்லை.
திருச்சந்தூர் மற்றும் திருநெல்வேலியில் இருந்து பேருந்தில் அந்திரூபேரை அடையலாம். இன்னும், ஒரு வண்டி வசதியாக இருக்கும். இந்த இடம் அஸ்வர் திருநகரியிலிருந்து 4 கி.மீ தூரத்தில் உள்ளது. இது திருநெல்வேலியில் இருந்து 39 கி.மீ.