அன்பிற்குரிய மகர ராசி நண்பர்களே தற்போது வரை சனி பகவான் விரையஸ்தானத்தில் அமர்ந்து நிறைய பொருள்விரையம், அலைச்சல்களையும், உடல் ரீதியாக பல தொல்லைகள் கொடுத்துக்கொண்டிருந்த சனி பகவான், சார்வரி வருடம், மார்கழி மாதம் 12ம் தேதி, ஞாயிற்று கிழமை, அதாவது 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி முதல் சனி பகவான் தனுசு ராசியிலிருந்து தனது ராசி வீடான மகர ராசிக்கு வந்து சென்று தங்களுக்கு ஜென்ம சனி தோஷத்தை ஏற்படுத்துகிறார். இந்த ஜென்ம சனியானது உங்களுக்கு எந்த வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை காண்போம் வாருங்கள்.
மகரம் ராசி சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்
- திருமண முயற்சி கைகூடும்
- கணவன் மனைவி ஒற்றுமை சிறக்கும்
- குழந்தைகளின் மந்த நிலை நீங்கும்
- கடன் பிரச்சினைகள் தீரும்
- தொழிலில் முன்னேற்றம் கிட்டும்
- சில துறையைச் சார்ந்த மாணவர்கள் சாதனைகளைப் புரிவார்கள்
விரிவான பலன்கள்
சனி பகவான் உங்கள் ராசியிலேயே சஞ்சாரம் செய்யவிருக்கிறார். உங்கள் ராசிக்கு ‘ஜென்மசனி’ எனும் சிறப்பு அந்தஸ்துடன் சனியின் சஞ்சாரம் நிகழப்போகிறது. மகர ராசிக்கு, ‘தனுஸ்தானம்’ என்று சொல்லக்கூடிய ஜென்ம ராசியிலேயே சனியின் சஞ்சாரம் தொடங்குகிறது. ஏழரைசனியில் ‘ஜென்மசனி’ எனும் சிறப்பு அந்தஸ்துடன் சனியின் சஞ்சாரம் நிகழப்போகிறது. ஜென்மசனியானவர் திருமண முயற்சியிலிருப்பவர்களுக்கு சிறந்த வாழ்க்கை துணையை அமைத்து தருவதில் முக்கிய பங்கு வகிக்க போகிறார். புதிய தொழில் முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்ற பாதையை ஜீவனகாரகன் சனி அமைத்து கொடுக்கப்போகிறார். சனீஸ்வரன் கல்விக்காக வெளிநாட்டுக்கு சென்று படிக்க முயற்சி செய்யும் மாணவர்களுக்கு வெளிநாட்டு கல்வி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க போகிறார்.
வருமானம்/ தொழில்
கடன் பிரச்சனையில் சிக்கி தவித்த மகர ராசி அன்பர்களுக்கு இந்த சனிப் பெயர்ச்சி சாதகமான நிலையில் சஞ்சரிப்பது கடன் பிரச்சனையிலிருந்து வெளியே வருவதற்கு உகந்த தருனமாக இந்த சனிப்பெயர்ச்சி விளங்குகிறது உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் சேர்த்து தன நிலையில் உயர்வும் ஏற்படும். தரகு, கமிஷன் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற தொழிலில் ஈடுபடுபவர்கள் நல்ல தன லாபத்தை அடையமுடியும். ரியல் எஸ்டேட் தொழிலில் சுமாரான லாபங்களையே எதிர்பார்க்க முடியும். மனைவியின் தன நிலையில் நல்ல உயர்வு ஏற்பட்டு குடும்ப பெருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு சனிபெயர்ச்சியின் ஆரம்ப காலகட்டத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். ஜூன் 2021 க்கு பிறகு வேலை பளு குறையும். புதிய சுயதொழில் தொடங்க முயற்சி எடுத்துவரும் நபர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். தொழிலில் நல்ல முன்னேற்ற சூழ்நிலை ஏற்படும் வாகனத்தை வைத்து பிரயாணத்தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தகவல் தொடர்பு, கமிஷன் மற்றும் விளம்பரத்துறையில் பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றமும் உத்தியோக உயர்வும் ஏற்படும்.
ஆரோக்கியம்:
மாணவர்களுக்கு ஒற்றை தலைவலி பாதிப்புகள் வரலாம். வயதானவர்களுக்கு கால் மூட்டுகளில் வலி ஏற்பட்டு மறையும். ஆண்களுக்கு கண் சம்மந்தப்பட்ட பிரச்சனை ஏற்படலாம். குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள். பெண்களுக்கு இந்த சனி பெயர்ச்சி காலகட்டங்களில் இறுக்கமான மனநிலை காணப்படும். தியானம் மற்றும் யோகா பயிற்சிகளில் ஈடுபட்டு வர இறுக்கமான மனநிலை மாறி சந்தோஷ மன நிலைக்கு மாறுவார்கள்.
திருமண வாழ்க்கை குடும்பம்
கணவன் மனைவிக்கு இடையில் ஒற்றுமை நிலவும். செப்டம்பர் 2021 காலகட்டங்களில் கணவன் மனைவிக்கு இடையில் சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு விலகும். காதல் உறவில் இருப்பவர்களில் திருமண முயற்சி வெற்றி பெறும். குழந்தைகள் படிப்பில் மந்த நிலை விலகி கிரகிக்கும் தன்மை அதிகரித்து படிப்பில் நல்ல முன்னேற்றம் கூடும். மூத்த குடிமக்களுக்கு ஆன்மீக சுற்றுலா செல்ல வாய்ப்புகள் உண்டாகும்.
கல்வி
இதுவரை மிதமாக படித்துவந்த குழந்தைகள் படிப்பில் அதிக கவனம் செலுத்தி நன்றாக படிப்பார்கள். கடல் வழி, செவிலியர், மனித வள மேம்பாடு மற்றும் உளவியல் சார்ந்த படிப்பு படிப்பவர்கள் வெற்றிகரமாக படிப்பை முடித்து படிப்பில் சாதனை புரிவார்கள். மிண்ணனு மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி படிப்பை படிப்பவர்கள் புதிய தொழில் நுட்பங்களை கண்டுபிடித்து உலக அளவில் சாதனை புரிவார்கள்.
பரிகாரம்
ஊரின் ஒதுக்கு புறமாக இருக்கும் கோவில்களுக்கு எண்ணை தானம் செய்வது, முடி காணிக்கை கொடுப்பது மேலும் அதேபகுதியில் இருக்கும் மனநிலை பாதிக்கப் பட்டவர், அல்லது உடல் ஊனமுற்றோருக்கு உதவுவதன் மூலம் சிறப்பான பலன்களை சனி பகவான் வழங்குவார்.
பொதுவாக மகர ராசியினருக்கு இந்த சனிப் பெயர்ச்சி காலம் நல்ல பலன் மற்றும் அசுப பலன் கலந்து தரும் காலமாக அமையும் எனக் கூறி தங்களுக்கு சனிபகவான் எல்லா வளங்களும் வழங்கவேண்டும் என பிரார்த்தனை செய்து நிறைவு செய்கின்றோம். நன்றி வணக்கம்.